×

குஜிலியம்பாறையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி ஜோதிமணி சுற்றுப்பயணம்

குஜிலியம்பாறை, ஜன. 31: குஜிலியம்பாறை ஒன்றியம், பாளையம் பேரூராட்சி பகுதிகளில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கு திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை வகிக்க, பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். எம்பி ஜோதிமணி குஜிலியம்பாறை ஒன்றியத்திலுள்ள 17 கிராம ஊராட்சிகள் மற்றும் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கிராமப்புறங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இதில் திமுக நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, சவுந்தர்மாரியப்பன், மணிமாறன், தாமரைக்கண்ணன், பாலசுப்பிரமணி, செல்வராஜ், ராஜ்குமார், கலைச்செல்வன், செல்வநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jothimani ,tour ,voters ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...