×

குடியரசு தின விழா கொண்டாட்டம்

பணகுடி, ஜன. 31: பணகுடி புள்ளிமான் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை பள்ளி நிர்வாகி பொன்னுலெட்சுமி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆசிரியை ரோஜாபுஷ்பம் வரவேற்றார். லெட்சுமி தேவி கல்வி டிரஸ்ட் ஆனந்த கண்மணி குடியரசு தின வரலாறு மற்றும் இன்றைய சூழ்நிலைகளை எடுத்துரைத்தார். பள்ளி தாளாளர் தேவிகா பேபி சிறப்புரை ஆற்றினார். பள்ளி முதல்வர் லாரன்ஸ், மக்களின் உரிமைகள் என்ற தலைப்பில் பேசினார். ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதேபோல் அடையக்கருங்குளம் அன்னை ஜோதி சேவா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவிற்கு வி.கே.புரம் எஸ்ஐ ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பள்ளி செயலர் செல்வகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகி ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

களக்காடு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், பேரூராட்சி  நிர்வாக அதிகாரி சுஷ்மா கொடியேற்றினார். தொடர்ந்து காந்தி சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார்,  மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு, பேரூராட்சி ஊழியர்கள் மாடசாமி,  லட்சுமணன் கலந்து கொண்டனர். சுரண்டை ஆலடிப்பட்டியில் உள்ள தர்மா தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராக்லேண்ட் தெய்வசித்தம் தலைமை வகித்தார். போலீஸ் எஸ்ஐ ஜெயராஜ் முன்னிலை வகித்தார். எஸ்ஐ உமா மகேஸ்வரி, தேசியக்கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை சுடலை வடிவு நன்றி கூறினார்.

Tags : Republic Day Celebration ,
× RELATED மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு