வி.கே.புரம், ஜன. 31: வி.கே.புரத்தில் நடந்த கலை இலக்கியப் போட்டிகளில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். வி.கே.புரத்தில் பாரதி நினைவு நாள் விழாக்குழு சார்பில் பாரதியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளி உள்ளிட்ட 27 பள்ளிகள் கலந்து கொண்டன. கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், உள்ளிட்ட போட்டிகளில் முதலிடத்தை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனிமெட்டில்டா ஆகியோர் பாராட்டினர்.