×

அமைச்சர் கடம்பூர்ராஜூ பேட்டி குளத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

குளத்தூர், ஜன. 31: குளத்தூரில் மாரியப்பன் நாடார்  முத்துக்கனியம்மாள் கல்லூரி சார்பில்  வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. குளத்தூர் த.மாரியப்பன் நாடார் முத்துக்கனியம்மாள் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி சார்பில் கல்லூரி தலைவர் தாமஸ் வழிகாட்டுதலின்படி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி இயக்குநர் கோபால் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். குளத்தூர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, எஸ்ஐக்கள் செல்லத்துரை, தேவராஜ் உள்ளிட்டோர் பேரணியைத் துவக்கிவைத்தனர். இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அணிவகுத்த மாணவ, மாணவிகள் குளத்தூர், குளத்தூர் காலனி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கடைவீதிகளில் நிறைவு செய்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.  ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Minister Kadamburraju ,
× RELATED கோவில்பட்டியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேர் கைது