×

ஆட்டோவில் சென்ற பெண்ணின் 5பவுன் நகை மாயம்

தூத்துக்குடி, ஜன.31: தூத்துக்குடி எஸ்.கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரின் மனைவி ராமலட்சுமி(75). இவர் கடந்த 26ம்தேதி தூத்துக்குடி புது பஸ்நிலையத்தில் இருந்து பயணிகள் ஆட்டோவில் பண்டாரம்பட்டிக்கு சென்றார். அப்போது அந்த ஆட்டோவில் மேலும் இரு பெண்கள் இருந்தனர். அவர்கள் சில்வர்புரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். அதன்பின்னர் ஆட்டோ புறப்பட்ட போது ராமலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை திருட்டு போயுள்ளது.  இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனையடுத்து ராமலட்சுமி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நகை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்