தூத்துக்குடி, ஜன.31: தூத்துக்குடி மாநகர 28வது வார்டு அமமுக கிழக்கு பகுதி இளைஞர் பாசறை செயலாளரும், வட்ட பொறுப்பாளருமான மணிகண்டன் தலைமையில் அமமுக வட்ட பிரதிநிதிகள் சகிலாபானு, ஹதிஜாபீவி, இணை செயலாளர் கவுசல்யா, துணை செயலாளர் வகிதாபானு, செயற்குழு உறுப்பினர்கள் சுகந்தி உட்பட 20 பேர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ். துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, மாநகர பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு, வழக்கறிஞர் முனியசாமி, வட்ட செயலாளர்கள் சுடலைமணி, ஜெகதீசன், பண்டாரவிளை பாஸ்கர், மற்றும் சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, பாலஜெயம், சாம்ராஜ், விஜய், ராமர், ராஜ்குமார், விக்ணேஷ், சரவணபெருமாள், சகாயராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.