×

தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் பாலம் கட்டுமான பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்

தர்மபுரி, ஜன.31:  தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் பாலம் கட்டும்பணியால், நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் மேற்பகுதியில், சாலையின் குறுக்கே பாலம் கட்டும்பணி நடக்கிறது. கடந்த 3 நாட்களாக பொக்லைன் மூலம் குழி தோண்டும் பணி நடக்கிறது. இந்த பணியால், தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மார்க்கத்தில் வரும் வாகனங்கள், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வழியாக செல்வதற்கு பதிலாக, மதிகோன்பாளையம் மற்றும் சந்தைபேட்டையின் வழியாக செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல், தர்மபுரி நகரத்தில் இருந்து வரும் வாகனங்கள் சந்தைபேட்டை, ராமக்காள் ஏரி மதிகோன்பாளையம் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முககூர்த்தநாள் என்பதால், தர்மபுரி நான்கு ரோடு ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இதில் இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள் சிக்கி தவித்தன. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags : road ,Dharmapuri-Tirupathur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...