×

ஏஆர்எஸ் இல்ல திருமணவிழா சுயமரியாதையோடு வாழ வேண்டும் மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

புதுக்கோட்டை, ஜன.31: அரிமளம் ஒன்றியம் தல்லாம்பட்டியில் நடந்த ஏஆர்எஸ் இல்ல திருமண விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்துக்குட்பட்ட கே.புதுப்பட்டி அருகே உள்ள தல்லாம்பட்டியில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன்-தேன்மொழி திருமணவிழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மண மக்களை வாழ்த்தி அவர் பேசுகையில், மணமக்களை அனைவரும் தமிழ் போலவும், கலைஞர் போலவும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவார்கள். நான் தற்போதைய சூழல்படி மத்திய பாஜக அரசை போலும், தமிழக அதிமுக அரசை போலும் மணமக்கள் இருக்கக்கூடாது. பாஜக அரசுக்கு தமிழக அதிமுக அரசு அடிமையாக உள்ளதுபோல் மணமக்கள் ஒருவருக்கொருவர் அடிமையாக இல்லாமல் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார். இந்த திருமண நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Udayanidhi Stalin ,bride ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...