×

28 நாட்களுக்கு வெளியில் செல்லதடை அன்னவாசல் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

இலுப்பூர், ஜன.31: அன்னவாசல் ஒன்றியக்குழு துணை தலைவர் தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடந்த 11ம் தேதி அன்னவாசல் ஒன்றியக்குழு துணை தலைவருக்கான தேர்தல் போதிய உறுப்பினர் வருகை தராததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மறுபடியும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அன்னவாசல் ஒன்றியகுழுவிற்கு 20 ஒன்றியகுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இதில் 10 திமுக, 9 அதிமுக மற்றும் 1 இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவார்கள். ஒன்றியகுழு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுலவலர் சுருதி தேர்தலை நடத்தினார்.  நேற்றும் தேர்தல் நடத்த போதிய உறுப்பினாகள் கலந்து கொள்ளாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து சிறிது நேரம் வருகை புரிந்து காத்திருந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து கலைந்து சென்றனர். இலுப்பூர் டிஎஸ்பி சிகாமணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Annawasal Union ,Vice President ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்