ஒரத்தநாடு, ஜன. 31: ஒரத்தநாடு அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனை புதிய கட்டிட வளாகத்தில் தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.