×

கொள்ளிடம் அருகே பக்கிம்காம் கால்வாய் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை

கொள்ளிடம், ஜன.31: கொள்ளிடம் அருகே தொடுவாய் கிராமத்தில் பக்கிம்காம் கால்வாய் குறுக்கே கடற்கரைக்குச் செல்லும்வகையில் பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தொடுவாய் கிராமத்தில் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடற்கரையையொட்டி வசித்து வரும் மீனவர் குடும்பத்தினர்கள் பேரிடர் காலங்களில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மீனவர்கள் கடற்கரைக்குச் சென்று எளிதில் திரும்பும் வகையில் தற்பொழுதுள்ள நிலையில் பக்கிம்காம் கால்வாயை சாதாரணமாக கடந்து வருவது சிரமமாக உள்ளது. கடற்கரைக்கு செல்லும் தற்பொழுதுள்ள பாலம் மிகவும் மோசமாகவும், உகந்ததாகவும் இல்லை. இறந்தவர்களின் சடலங்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பக்க்கிம்காம் கால்வாயை கடந்து 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் பக்கிம்காம் கால்வாயை கடந்து செல்வது மிகுந்த சிரமத்திற்குரியதாக இருப்பதால் பொதுமக்களின் நலன் கருதி தொடுவாய் கிராமத்தில் பக்கிம்காம் கால்வாய் குறுக்கே கடற்கரைக்கு எளிதில் சென்று வரும் வகையில் வலிமை வாய்ந்த பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் சீர்காழி தாசில்தார் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : bridge ,canal ,creek ,Pakkim ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!