×

ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு வேளாங்கண்ணியில் அகில இந்திய மறைமாவட்ட அருட்பணியாளர்கள் மாநாடு

நாகை, ஜன.31: வேளாங்கண்ணியில் அகில இந்திய மறை மாவட்ட அருட்பணியாளர்கள் ஒருங்கிணைந்த மாநாடு வேளாங்கண்ணியில் நடந்தது. வேளாங்கண்ணியில் அகில இந்திய மறை மாவட்ட அருட்பணியாளர்கள் ஒருங்கிணைந்த மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் தமிழகம், மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கத்தோலிக்க தேவாலாயங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் தொடங்கி வைத்தார். நேற்று நடந்த மாநாட்டில் முன்னாள் எம்பி பீட்டர்அல்போன்ஸ், இந்திய திருநாட்டில் வாழும் மக்களிடம் அருட்தந்தையர்கள் எவ்வாறு அன்பு செலுத்துவது குறித்தும், குருத்துவ வாழ்வின் மகிழ்ச்சியும், மண்டலங்களில் நடைபெறும் அருட்பணியின் சிறப்பு அம்சங்களும் குறித்து பேசினார். இன்று நிறைவு மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

Tags : Velankanni ,All India Diocesan Bureau Conference ,
× RELATED பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனம்