×

மனித நேய வார விழா

உடுமலை, ஜன. 31: திருப்பூர் மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில், உடுமலை ஜி.வி.ஜி. மகளிர் கல்லூரியில் மனித நேய வார விழா நடந்தது. கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகர் முன்னிலை வகித்தார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்பி. கலிவரதன் வரவேற்றார். போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ், உடுமலை விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி, காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் சாதி, மத பேதமின்றி மனித நேயத்துடன் வாழ அறிவுறுத்தப்பட்டது.  பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ள காவலன் செயலியால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு குறித்த நாடகம், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுதல் குறித்த நாடகங்களை மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.  ஜி.வி.ஜி. மகளிர் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, காவல் ஆய்வாளர்கள் முருகேசன், ஓம்பிரகாஷ், சாந்தி,மகேஷ்வரி, சுப்புராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Humanitarian Week Festival ,
× RELATED ஒட்டன்சத்திரம் தருமத்துபட்டியில் மனித நேய வார விழா