×

வாலிபரிடம் செல்போன் பறிப்பு



திருப்பூர்,ஜன.31: திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (22). மெடிக்கல் ஸ்டோரில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பெரியார், அண்ணா சிலை அருகில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றபோது அவரை வழி மறித்த ஒருவர் செல்போனை பறித்ததோடு பைக்கில் தயாராக இருந்த மற்றொருவருடன் ஏறி தப்பினார். அருகிலிருந்தவர்கள் துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில்  வடக்கு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...