×

நெலாக்கோட்டை ஊராட்சி அலுவலகம் மீண்டும் பழைய இடத்திற்கே மாறுகிறது

பந்தலூர்,ஜன.31: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி அலுவலகம் நெலாக்கோட்டை பஜாரில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. போதிய  இடவதி  இல்லாததால் புதிய அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானித்து கடந்த ஐந்தாண்டுக்கு முன் கரியசோலை செல்லும் சாலையில் புதிய பஞ்சாயத்து கட்டிடம் கட்டப்பட்டு நெலாக்கோட்டை  பஜாரில் செயல்பட்டு வந்த பஞ்சாயத்து கட்டிடத்தை ஐந்தாண்டுகளுக்கு முன் இடமாற்றம் செய்தனர்.

நெலாக்கோட்டை பஜாரில் இருந்து தொலைவான இடத்தில் புதிய பஞ்சாயத்து அலுவலகம் அமைந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள் மனு எழுதுவதற்கு பேப்பர் மற்றும் நகல் எடுப்பதற்காக நெலாக்கோட்டை பஜாருக்கு வந்து செல்ல வேண்டும். அலுவலகம் அருகே எந்தவித கடைகளும் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அதனால் கடந்த வாரம் குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மீண்டும் பஜாரில் உள்ள பழைய பஞ்சாயத்து கட்டிடத்திற்கு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் படிப்படியாக பஞ்சாயத்து அலுவலகம் இடமாற்றம் நடைபெறும் என தெரிகிறது.

Tags : Nelakottai Panchayat Office ,location ,
× RELATED ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்!