×

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பொள்ளாச்சி, ஜன. 31: கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று, மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, பொள்ளாச்சி பஸ்நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி மற்றும் அனைவரும் அகிம்சையை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதற்கு, மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் மோகன்ராஜ், நடராஜ், மோகன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், இலக்கிய பிரிவு மாவட்ட தலைவர் முபாரக் மற்றும் சின்ராஜ், பஞ்சலிங்கம், காளிமுத்து, கோபால்,  சாலமன், சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பொள்ளாச்சியை அடுத்த மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியின சிறுவர்கள் நேற்று, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, நியூஸ்கீம்ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Maid ,Gandhi ,
× RELATED குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்