×

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

உடுமலை,ஜன.31: ஐந்து மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், நேற்று முன்தினம் மாலை மடத்துக்குளம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடத்தூர் கதிரவன் தலைமை வகித்தார். த.பெ.தி.க. வெளியீட்டுச் செயலாளர் மனோகரன், அருந்ததியர் பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மனோகரன், திராவிடர் கழக மாநில பொருளாளர் தங்கவேல், விசிக துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டு மைய மாநில துணை செயலாளர் விடுதலைமணி ஆகியோர் பேசினர். த.பெ.தி.க. திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் மோகன்குமார், செயலாளர் மயில்சாமி, உடுமலை நகர தலைவர் யாழ் நடராசன், செயலாளர் ரமேஷ், உடுமலை ஒன்றிய அமைப்பாளர் விசுவநாதன், அப்பாஸ், திருமூர்த்தி, விசிக மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராசசேகரன், மனித நேய மக்கள் கட்சி மடத்துக்குளம் ஒன்றிய பொருளாளர்  சுல்தான், மக்கள் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் ப.ரவிச்சந்திரன், ஆதித்தமிழர் பேரவை மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், கடத்தூர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,cancellation ,general election ,
× RELATED வரும் 26, மே 7ம் தேதி பொது தேர்தல்...