×

நாட்றம்பள்ளி ரயில் நிலையம் அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்றம்பள்ளி, ஜன.30: நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து ரயிலில் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரிமுத்தூர், சோமநாயக்கன்பட்டி, பச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரயில் மூலம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு மர்ம நபர்கள் ரேஷன் அரிசியை கடத்தி சென்று, அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் உத்தரவின் பேரில் நேற்று நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சுமதி சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையம் அருகே சிறுசிறு மூட்டைகளாக ஒரு டன் ரேஷன் அரிசி கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சுமதி அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

Tags : railway station ,Natrampalli ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...