×

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

ஜோலார்பேட்டை, ஜன.30:ஜோலார்பேட்டை அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஜோலார்பேட்டை அடுத்த ஆண்ணான்டப்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராகுல்(28) என்பவர் அத்துமீறி வீட்டிற்கு நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தில் ஓடிவந்தனர். அதனை பார்த்த ராகுல் கத்தியைக் காட்டி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் பிரவீன்குமார்(28) என்பவர் சந்தை கோடியூரில் நடந்த சந்தையில் ஆடு வாங்குவதற்காக தனது பைக்கில் சென்றார். அப்போது ஆண்ணான்டப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சாலையோரம் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் பிரவீன் குமார் பைக்கை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ₹1000 வழிப்பறி செய்தார். இதனைபார்த்த அங்கிருந்த சிலர் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ராகுல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Jolarpet ,
× RELATED ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத...