×

திருவண்ணாமலை அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து

திருவண்ணாமலை, ஜன.30: திருவண்ணாமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் இடிந்து சேதமானது . திருவண்ணாமலை அடுத்த ேமல்புத்தியந்தல் கிராமத்தில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில், தீபாவளிக்கு விற்பனையாகாத ₹50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று  மாலை பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் ெவடித்து சிதறின. மேலும் , குடோனின் மேற்கூரை தகடுகள் சிதறின. கட்டிட சுவர்களும் இடிந்து சேதமானது.

இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 30 நிமிடம் போரடி தீயை அணைத்தனர். மேலும், குடோனில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

ஆனாலும், விபத்து நடந்த குடோன் கட்டிடத்துக்கு அருகே நின்றிருந்த இருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், யாருக்கும் காயமில்ைலை என போலீசார் மறுத்தனர். இதுகுறித்து, தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,Pattadas Gudon ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...