×

கண்ணமங்கலம் நூலகத்தில் தேசிய செய்தித்தாள் தின விழா

கண்ணமங்கலம், ஜன.30: கண்ணமங்கலம் நூலகத்தில் தேசிய செய்தித்தாள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் பி.சி.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பணிநிறைவு தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்ப குருசாமி ராஜா முன்னிலை வகித்தனர். நூலகர் சிவசங்கரன் வரவேற்றார். இதில் பேசிய முக்கிய பிரமுகர்கள், உலக நிகழ்வுகளையும், உண்மை தன்மையுடன் உடனுக்குடன் வழங்கிட இரவு பகல் பாராமல் உழைக்கும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் துறையினருக்கு வாசகர்கள் சார்பாக நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். பின்னர் வாசகர்களுக்கு செய்தித்தாள்கள் மற்றும் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில் வாசகர் வட்ட நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாபு, பிரபு, ரவி சங்கர் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Newspaper ,Kannamangalam Library ,
× RELATED கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு...