×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பாராட்டு விழா மாநாட்டு திடலில் காலை 9 மணிக்கு பங்கேற்க வேண்டும்முதன்மை செயலாளர் கே.என்.நேரு அறிக்கை

திருச்சி,ஜன.30: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாநாட்டு திடலில் காலை 9 மணிக்கு பங்கேற்க வேண்டும் என திமுக முதன்மை செயலாளரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, திமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்கின்றேன். ஊராட்சி குழு தலைவர், உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அவரவர்கள் பொறுப்பில் மாநாட்டு திடலில் காலை 9 மணிக்கு இருக்கையில் அமர வைக்க வேண்டும்.

அதுபோல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று திமுகவில் இணைத்து கொள்ள வருபவர்களுக்கும் மாநாட்டு திடலில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. அவர்களும் மாநாட்டில் பங்கேற்க வசதியாக அனைத்து மாவட்ட செயலாளர்களும் அனுமதி சீட்டினை பெற்று சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களையும் மாநாட்டில் கலந்து கொள்ள செய்ய வேண்டுகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரியாக 9.30 மணிக்கு மாநாட்டிற்கு வருகிறார். எனவே மாவட்ட செயலாளர்கள் வெற்றி பெற்றி அனைவரையும் அவரவர் இருக்கையில் அமர வைக்க வேண்டுகிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு உதவியாக வருபவர்களுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு அங்கு எல்இடி வழியே பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே மாநாட்டில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்களும், சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களும் கலந்து கொண்டு மாநாடு முழு அளவில் வெற்றி பெறுவதற்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கழக முன்னணியினரும் உதவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Winners ,Local Government Elections ,Appreciation Ceremony ,
× RELATED தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம்...