அரவக்குறிச்சி, ஜன. 30:அரவக்குறிச்சி ஆறுமுகம் அகடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சமுதாய விழாவில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. அரவக்குறிச்சி ஆறுமுகம் அகடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமுதாய விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கல்விசார் இயக்குநர் பழனிவேல் வரவேற்றார். பள்ளி தாளாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். இலவச கண் மருத்துவ முகாமை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுப்பிரமணி துவக்கி வைத்துப் பேசினார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர்.விழாவில் பள்ளி முதல்வர் சிவக்குமார், ஆசிரியர் வடிவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 300 க்கும் மேற்பட்ட கண் நோயாளிகள் ஐஓஎல் லென்ஸ் பொருத்துதல் உள்ளிட்ட கண் சிகிச்சை இலவசமாக பெற்று பயனடைந்தனர்.