×

குரும்பூர் அருகே பூசாரியை தாக்கிய 3 பேர் கைது

திருச்செந்தூர், ஜன. 30: குரும்பூர் அருகே மேல கல்லாம்பாறையை சேர்ந்தவர் சின்னத்துரை(50). இவர் அங்குள்ள அம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். கடந்தாண்டு கோயில் கொடை விழாவின்போது பேனர் வைப்பது தொடர்பாக சின்னத்துரைக்கும், இதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆவுடையப்பன்(35), முத்துசாமி மகன் முத்துராஜா(20), முத்துசாமி(45), காளிமுத்து என்ற ராஜாமணி(55) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் இந்த பிரச்னை தொடர்பாக ஆவுடையப்பன், முத்துராஜா, முத்துசாமி, காளிமுத்து ஆகியோர், சின்னத்துரையிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 4 பேரும், சின்னத்துரையை தாக்கினர். இதில் படுகாயமடைந்த சின்னத்துரை சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் எஸ்ஐ சுந்தர்ராஜ் வழக்கு பதிந்து ஆவுடையப்பன், முத்துராஜா, காளிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தார். தலைமறைவான முத்துசாமியை தேடி வருகின்றனர்.

Tags : priest ,Kurumbur ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...