பாவூர்சத்திரம், ஜன. 30: பாவூர்சத்திரம் எம்எஸ்பி.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு நடைபெற்றது. கோவை யுரேகா போர்ஸ் நிறுவன மேலாளர் நித்யா ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வை நடத்தினார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்து துறை தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் செய்திருந்தனர்.