×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை, ஜன. 30:  கரிவலம்வந்தநல்லூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மாங்குடி செவக்காடு பகுதியை சேர்ந்தவர் கசமாடன் மகன் மகாலிங்கம்(23). டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் மகாலிங்கத்தை கைது செய்தனர்.

Tags : Plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...