கெங்கவல்லி, ஜன.29: கெங்கவல்லி அடுத்த வீரகனூரில் மாரியம்மன், பொன்னியம்மன், செல்லியம்மன் கோயில் தேரோட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, தேர் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து தேருக்கான புதிய நான்கு சக்கரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதனை பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சக்கரங்களின் மதிப்பு சுமார் ₹5 லட்சம் என கூறப்படுகிறது.