×

குமாரபாளையம் எக்ஸல் கல்வி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

குமாரபாளையம், ஜன.30: குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் 25,375 சதுரஅடியில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் 2400க்கும் மேற்பட்டோர் அமர இருக்கைகள், 12க்கும் மேற்பட்ட சொகுசு அறைகள், மணமகன், மணமகளுக்கு 4 குளிரூட்டப்பட்ட அறைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்டபத்தில் கல்யாண கணபதி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர 8,729 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட மினி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே சமயத்தில் 500க்கும் மேற்பட்டோர் உணவருந்தலாம். முதல் தளத்தில் மாநாடு மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாம். 8,600 சதுர அடியில் உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

சைவ விருந்து செய்ய நவீன சாதனங்களை கொண்ட சமையல் கூடம், அதற்கான பாத்திரங்களுடன் உள்ளது. மேலும், 20,664 சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அசைவம் சமைக்க சமையலறை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பேராசிரியர் நடேசன், நிர்வாக அறங்காவலர் பார்வதி நடேசன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், கவியரசி மதன்கார்த்திக் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Opening Ceremony ,Indoor Stadium ,Excel Education Complex ,Kumarapalayam ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா