×

மின் ஆளுமை பதிவு மேற்கொள்ளாத முன்னாள் படை வீரர்கள் நேரில் ஆஜராக அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.30: மின் ஆளுமைப் பதிவை மேற்கொள்ளாத முன்னாள் படைவீரர்கள் உரிய ஆவணங்களடன் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  2014ம் ஆண்டிற்கு முன்பு, படையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் அனைவருக்கும் மின் ஆளுமைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை மின் ஆளுமை பதிவு மேற்கொள்ளப்படாத, மேலும் இவ்வலுவகத்தில் ஏற்கனவே ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்காத முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள், பிபிஓ, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பேன் கார்டு, அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் கிருஷ்ணகிரியில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் காலம் தாழ்த்தாமல் ஆஜராக வேண்டும்.  மேலும், ஓய்வூதியத் பெறும் அனைத்து முன்னாள் படைவீரர் விதவையர்களுக்கும், இது பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா தெரிவித்துள்ளார்.

Tags : Soldiers ,
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை