×

சிதம்பரத்தில் பரிதாபம் ஓடையில் மூழ்கி தொழிலாளி பலி

சிதம்பரம், ஜன. 30:  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சிதம்பரம் பாசிமுத்தான் ஓடையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள பாசிமுத்தான் ஓடையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சடலமாக கிடந்தவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கலவை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (44) என்பதும், இவர் சிதம்பரம் தங்கி கூலிவேலை செய்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பாஸ்கர் குளிப்பதற்காகவோ அல்லது இயற்கை உபாதை கழிப்பதற்காகவோ ஓடையில் இறங்கி இருக்கலாம் என்றும், ஓடையின் ஆழம் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : stream ,Chidambaram ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...