×

நிலுவை தொகை செலுத்தாத கடைக்கு அதிகாரிகள் சீல்

கள்ளக்குறிச்சி, ஜன. 30: தியாகதுருகம் பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 63 கடைகள் உள்ளது. அதில் 4 ஆண்டுகளாக வாடகை பாக்கி தொகை செலுத்தாத 43 கடை உரிமையாளர்களுக்கு கடந்த 27ம் தேதிக்குள் நிலுவை தொகை செலுத்த வேண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து பல்வேறு கடை உரிமையாளர்கள் நிலுவை தொகையை தானாக முன்வந்து செலுத்தினர். அதாவது ரூ.21 லட்சத்து 85 ஆயிரத்து 450 ரூபாய் அதிரடியாக வசூல் செய்யப்பட்டன. இதில் கடந்த 2016-17 முதல் 2019-20ம் ஆண்டு வரை ரூ.79 லட்சத்து 26 ஆயிரத்து 681 ரூபாய் பாக்கி தொகை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 42 கடை உரிமையாளர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை பேரூராட்சியில் செலுத்தி கால அவகாசம் பெற்றுள்ளனர். அதில் ஒரு கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டும் நிலுவை தொகை செலுத்தப்படாததால் தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமையில் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்த கடைக்கு அதிரடியாக சீல் வைத்தனர். 

Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி