×

வத்திராயிருப்பு யூனியனில் தலைவர் பதவிக்கு இன்று மறுதேர்தல் 150 போலீசார் பாதுகாப்பு

திருவில்லிபுத்தூர், ஜன.30: வத்திராயிருப்பு யூனியன் தலைவர் மறு தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் 150க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு யூனியன் தலைவர் மறைமுக தேர்தல் ஜன.11ம் தேதி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் மறு தேர்தல் இன்று காலை நடக்கிறது.இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பிக்கள் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக, யூனியன் அலுவலகம் செல்லும் முக்கிய பாதைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வத்திராயிருப்பு யூனியன் தலைவர் மறு தேர்தலை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags : policemen ,Vice President ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்