அருப்புக்கோட்டை, ஜன.30: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்பெர்மேசன் டெக்னாலஜி, ரெப்ஜிரேசன், ஏர்கண்டிசன், டெக்ஸ்டைல் ஆகிய துறைகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சந்திரா தலைமை வகித்தார். துணை முதல்வர் கந்தவேல்சாமி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு அதிகாரி சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். ராஜ்ஸ்ரீரியா நிறுவனம் நடத்திய எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் 45 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
பெஸ்ட் கார்ப்பரேசன் நிறுவனம் நடத்திய தேர்வில் 15 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அபிராமி இன்ஜினியரிங் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 75 மாணவ, மாணவிகள் எழுத்து தேர்வு எழுதினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.