×

தீக்குளித்த கணவர் சாவு மனைவி சீரியஸ்

திருப்புத்தூர், ஜன.30: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கே.வலையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் செல்வமணி(45). இவருக்கு திருமணமாகி மல்லிகா(34) என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர் டெல்லியில் ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் பொங்கலுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது, கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வமணி கடந்த ஜன.23ம் தேதி வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். இதை பார்த்த மனைவி மல்லிகா அவரை காப்பாற்ற முயன்றார். இதில் இருவருக்கும் தீபற்றியதில் படுகாயமடைந்தனர். பின்னர் இவர்கள் இருவரையும் மானகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று செல்வமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மல்லிகா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sirius ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு சென்று...