×

திருநங்கைபோல் டிக் டாக்கில் பதிவு செய்த கணவர் மாயம்; மனைவி போலீசில் புகார்

அன்னூர்,ஜன.30:  கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வள்ளியம்மாள் லே அவுட் குடியிருப்பவர் சிவக்குமார் (28). சமையல் தொழிலாளி. இவர் தனது மனைவி பிரியதர்ஷினியிடம் (23), கடந்த 5 தேதி தான் சமையல்  தொழில் சம்பந்தமாக கோவை சென்று பணியாற்றி வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கணவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் பிரியதர்ஷினியால் கண்டு பிடிக்கமுடியவில்லை.இது குறித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் கடந்த சில நாட்களாகவே திருநங்கைபோல் டிக் டாக் போஸ்ட் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்