×

திருவாரூரில் பிப்.1ம் தேதி நடக்கிறது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர், ஜன. 29: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முலம் பிப்ரவரி 1 ம் தேதியன்று திருவாரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்றும் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பலனடைய மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் ஆனந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முலமாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப். 1 ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8.30 மணிக்கு திருவாரூர், கும்பகோணம் சாலையில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்வதால், மாவட்டத்தில் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதுவரை 3155 பணியிடங்களுக்கான காலியிட அறிவிப்பு பெறப் பட்டுள்ளது.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட் டாது. பதிவு தொடர்ந்து உயிர்ப் பதிவேட்டில் பராமரிக்கப்பட்டு வரும். அரசி னால் அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும். வேலைதேடும் இளைஞர்கள் (ஆண், பெண் இரு பாலரும்) இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெறலாம்.இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் தங்களின் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சுயகுறிப்பு, புகைப்படம் போன்ற ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் பிப்ரவரி 1ம் தேதியன்று மேற் கண்ட பள்ளியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Tiruvarur ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...