×

ராஜபாளையத்தில் பரபரப்பு முன்விரோதத்தில் முதியவர் கழுத்தறுத்து கொலை

ராஜபாளையம், ஜன. 29:  ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.ராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல். சுமார் 60 வயது மதிக்கத்தக்க விவசாயியான இவர், நேற்று இரவு கிராமத்தின் வெளிப்பகுதியிலிருந்து குடிநீர் எடுத்துக் கொண்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தங்கவேலை டூவீலரிலிருந்து தள்ளிவிட்டனர். நிலைதடுமாறி அவர் விழுந்தவுடன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர். அவ்வழியாக சென்றவர்கள் தங்கவேல் இறந்து கிடந்ததை கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது அங்கு திரண்ட உறவினர்களும், ஊர் மக்களும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை தங்கவேலின் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி., நாகசங்கர் மற்றும் போலீசார் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடித்து கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்த பின் உறவினர்களும், கிராம மக்களும் கலைந்து சென்றனர். பின்னர் தங்கவேலின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags : death ,Rajapalayam ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி