×

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

சேலம், ஜன.29: சேலத்தில் நடந்த அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா ஜாகீர் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஆல் இந்தியா கராத்தே போட்டி சேலம் மகாத்மா காந்தி உள் விளையாட்டு அரங்கில் கடந்த 12ம் தேதி நடந்தது. இந்த ஒரு நாள் போட்டியை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 ஆண்டு காலம் பயிற்சி நடத்தி வரும் முதன்மை மாஸ்டர் கியோசி குப்புராஜ் தலைமையில் நடந்தது. இதில் கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து 850 பேர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட மாஸ்டர்கள் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்தனர். இறுதியாக போட்டியில் பல வெற்றி பரிசுகளை பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஜாகீர் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவில் வோல்டு சோடகான் கராத்தே அமைப்பின் தலைவர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுந்தரராஜன், பொருளாளர் ஜோதிமுருகன், பிரிக்ஸ் நிறுவனர் மணி பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். பயிற்சியாளர்கள் வெங்கடேஸ்வரன், பரணிதரன், கதிர்வேல், கோபால், சூரியபிரகாஷ், அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : player ,karate competition ,heroes ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...