×

பள்ளிபாளையத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

பள்ளிபாளையம், ஜன.29: மத்திய அரசின் தவறான கொள்கைளால் நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது என பள்ளிபாளையத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் தனகோபால், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மத்திய பாஜக அரசின் தவறான கொள்கையால் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த 45 ஆண்டுகளாக படித்த பட்டதாரி இளைஞர்கள் தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம்தோறும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் முட்டை பவுடர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், ஸ்பின்னிங் மில்கள், துணி பதனிடும் ஆலைகள் போன்ற புதிய புதிய தொழில் வாய்ப்புகளை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வேலைவாய்ப்பு குறைந்து போனது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரஙகளை விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

Tags : Meeting ,Youth Congress Executives ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்