×

கிணற்றில் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

தர்மபுரி, ஜன.29: வெண்ணாம்பட்டி அருகே கிணற்றில் கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகளை அகற்றி தூர் வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி டவுனை அடுத்து வெண்ணாம்பட்டி கிராமத்தில், கோதண்டராமர்கோயில், கூட்டுறவு சொசைட்டி, தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிணற்றில் இருந்து அருகில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு அபிஷேக நீர் எடுப்பது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்து, வெண்ணாம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. நாளடைவில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கிணற்றில் நீர் இன்றி வறண்டது. இதனால் குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. வறண்ட கிணற்றில் குப்பைகளை சிலர் கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். எனவே கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...