×

தர்மபுரி பிஎஸ்என்எல்லில் 144 பேர் பணி ஓய்வு

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி நிறைவு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.  தர்மபுரி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி பணியை நிறைவு செய்த 2பேர் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற 142பேர் உள்பட 144 பேருக்கும் நேற்று பாராட்டு விழா, திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் கோட்ட பொதுமேலாளர் வித்யாசாகர் வரவேற்றார். பணி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற 144 பேருக்கும், முதன்மை பொது மேலாளர் சபீஷ் பணி ஓய்வு ஆணையை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ராமசந்திரன், பாத்திமா மேரி, சுகந்தி, உமா, கோபாலன், சந்திரமோகன், வெங்கடேசன், மாரிமுத்து, ஜான்நேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : retirees ,
× RELATED சென்னை மாநகர காவல் துறையில்...