×

கொடிநாள் வசூலில் சாதனை விழுப்புரம் ஆட்சியருக்கு சுழற்கேடயம் தமிழக ஆளுநர் வழங்கி கவுரவித்தார்

விழுப்புரம், ஜன. 28:   கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால்புரோகித் சுழற்கேடயம் வழங்கி கவுரவித்தார். விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் அரசு இலக்காக ரூ.71,98,100 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட ரூ.1,82,85,000 அதிகமாக வசூல் செய்து விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இச்சாதனைக்காக குடியரசுதினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர்விருந்தின் போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரைக்கு சுழற்கேடயம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், அரசு முதன்மை செயலாளர்கள் உள்ளிட்ட பலர்
உடனிருந்தனர்.

Tags : Governor ,Villupuram ,Tamil Nadu ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...