×

மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பலூன் பறக்கவிட்டதால் பரபரப்பு

மயிலாடுதுறை, ஜன.27: மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கலர் பலூன் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்ததிலிருந்து பல்வேறு மாநிலங்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த சட்டத்தை ஆதரித்து பாஜகவினர் துண்டறிக்கை பிரசாரத்தை மேற்கொண்டனர். நேற்று மதியம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து தேசியகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தொடர்ந்து நகரத் தலைவர் மோடிக்கண்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு உட்பட கட்சி நிர்வாகிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலர் பலூன் பறக்கவிட்டு முழக்கங்களை எழுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : city ,Mayiladuthurai ,office ,BJP ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...