×

தேவதானப்பட்டி பகுதியில் 71வது குடியரசு தினவிழா

தேவதானப்பட்டி, ஜன.28: தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஜி.கல்லுப்பட்டி  ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி தேசிய கொடியேற்றினார். துணைத்தலைவர் சிஎம்.ஆண்டிச்சாமி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் பாண்டியராஜ், பொதுமக்கள் உடனிருந்தனர்.  டி.வாடிப்பட்டி ஊராட்சியில் தங்கராஜ் கொடியேற்றினார்.   துணைத்தலைவர் இந்துராணி, வார்டு உறுப்பினர்கள்,  ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.  சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் பரமசிவம் தேசிய கொடியேற்றினார்.  துணைத்தலைவர் சுகந்தி, ஊராட்சி செயலர் பிச்சைமணி உடனிருந்தனர். ஜெயமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் அங்கம்மாள்சப்பானி கொடியேற்றினார்.   துணைத்தலைவர் தேவி, ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சம்சுல்குதா கொடியேற்றினார்.  துணைத்தலைவர் நபிசாபீவி,  ஊராட்சி செயலர் சாகுல்அமீது கலந்து கொண்டனர். அ.வாடிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயராம் கொடியேற்றினார்.

துணைத்தலைவர் கண்ணப்பன்,  ஊராட்சி செயலர் செல்லப்பாண்டி கலந்து கொண்டனர். மேல்மங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தேசிய கொடியேற்றினார்.  துணைத்தலைவர் வளர்மதி, ஊராட்சி செயலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜி.கல்லுப்பட்டி அரசு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரசீதாபேகம், கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிடிஏ தலைவர் அய்யாத்துரை, தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவம், பொம்மிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நட்சத்திரவிஜயகலா தேசிய கொடியேற்றினர்.
தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் எஸ்.ஐ முருகன், மேரிமாதா கல்லூரி முதல்வர் ஐசக், தேவதானப்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையத்தில்  மருத்துவர் புவனேஸ்வரி  தேசிய கொடியேற்றினர்

Tags : Republic Day Festival ,Devadanapatti ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை