×

மயிலாடும்பாறை அருகே திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

வருசநாடு, ஜன.28: மயிலாடும்பாறை அருகே தாழையூத்து மலை கிராமத்தில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் தலைமை வகித்து பேசினார். கடமலை மயிலை  ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக  மயிலாடும்பாறை முன்னாள் யூனியன் சேர்மன்கள் தமிழரசன், தேசிங்குராஜன், முன்னாள் வீட்டுவசதி வாரிய தலைவர் ஜெயபால், தேனி மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மணிமாறன், ஊராட்சி செயலாளர்கள் ஜெயச்சந்திரன், ஆனந்தன் கருப்பையா, தென்னரசு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பவுன்ராஜ், ஒன்றிய வர்த்தக அணி  அமைப்பாளர்கள் சக்திவேல், சேர்மலை, ஒன்றிய மாணவரணி செயலாளர் சரவணன்,  கிளை கழக நிர்வாகிகள் இளையராஜா, அறிவழகன், சோலைராஜா, நரியூத்து ஊராட்சி மன்றதலைவர் தங்கப்பாண்டி, சேர்மலை ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜானிடம் பல்வேறு கோரிக்கை முன்வைத்து மனு அளித்தனர். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலை திட்டத்தை உடனே செயல்படுத்திட தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பின்பு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.

Tags : executives ,DMK ,Mayiladuthurai ,
× RELATED திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்