×

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

மூணாறு, ஜன.28: மூணாறு அருகே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி நேற்று   மெகா மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆதிவாசிகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தி மெகா மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது காஞ்சியார் கலாச்சார நிலையம் முதல் இடுக்கி தங்கமணி பகுதி வரை நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பொதுமக்கள், அனைத்து மதத்தினர், மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும் கேரள மின்சார துறை அமைச்சர் எம்.எம்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கே ஜெயச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : human chain struggle ,
× RELATED CAA-விற்கு எதிராக திருச்சி, ஈரோடு, நெல்லை...