×

குடியரசு தின விழாவில் தலைவர்கள் வேடம் அணிந்து அசத்தல்

தேவகோட்டை, ஜன.28: தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் பொறியாளர் அய்யனார் கொடியேற்றினார். தியாகிகள் பூங்காவில் மீரா உசேன், தேவகோட்டை நகர் காங்கிரஸ் காரியாலயத்தில் வள்ளாலமோகன்,தேவகோட்டை ஓய்வூதியம் பெறுநர் சங்கத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நம்பூ விஸ்வநாதன் தேசிய கொடியேற்றினார்.
தேவகோட்டை ராம்நகர் சிவகங்கை ராஜா சாலை மைதானத்தில் சுப்பிரமணியன், தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளைச்சாமி, தேவகோட்டை முருகானந்த நடுநிலைப்பள்ளியில் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றினர்.
தேவகோட்டை ஜெமீந்தார் தெரு உயர்நிலைப்பள்ளியில் நாகூர்கனி, தேவகோட்டை சின்னப்பன் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காசிநாதன், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் மாவிடுதிக்கோட்டை நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தேசிய கொடியேற்றினார். தலைமையாசிரியை ஜெயந்தி வரவேற்றார். தலைவர்கள் வேடத்தில் மாணவர்கள் மாறுவேடத்தில் சிறப்பித்தனர். தேவகோட்டை அரு கே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தனலெட்சுமி தலைமை வகித்தார். ஜோசப் தலைமை வகித்து கொடியேற்றினார். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் மங்களம் நடுநிலை பள்ளியில் வெங்களூர் ஊராட்சி மன்றத்தலைவர் அண்ணாத்துரை தலைமையேற்று தேசியக் கொடி ஏற்றினார். தலைமையாசிரியை சுப.கவிதா வரவேற்றார். கலை நிகழ்ச்சி நடந்தது.

Tags : Leaders ,Republic Day ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...