×

திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

பரமக்குடி ஜன.28:  திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திமுக மாணவரணி சார்பாக பரமக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வேல்ராமன், நகர மாணவரணி செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைசாமி வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் காவேரிபட்டினம் இளையராஜா, மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்  சம்பத், ஒன்றிய செயலாளர்கள் பரமக்குடி கிழக்கு ஜெயக்குமார், பரமக்குடி மேற்கு தினகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் அப்பாஸ் (எ) இளஞ்செழியன்,ராஜாராம் ஆகியோருக்கு ரூ.5000 பொற்கிழி வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன், பேரூர் செயலாளர்கள் கமுதி அம்பலம், முதுகுளத்தூர் ஷாஜகான்,பரமக்குடி நகர் மாணவரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன், பரமக்குடி ஒன்றிய அமைப்பாளர் வேலுச்சாமி, நயினார்கோவில் ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட மாணவரணிதுணை அமைப்பாளர் ராமபாண்டி நன்றி கூறினார்.

Tags : martyrs ,student ,DMK ,
× RELATED ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி