×

எலக்ட்ரீசியனிடம் பணம் பறித்தவர் கைது

திருச்சி, ஜன.28: திருச்சி புத்தூர் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55). எலக்ட்ரீசியன். இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ராமச்சந்திரனை மிரட்டி பாக்கெட்டிலிருந்த ரூ.500ஐ பறித்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் புத்தூர் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் (எ) ஹேமானந்த் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த், தனபால் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Electrician ,
× RELATED எடப்பாடி பொய் பிரசாரம் 24 மணி நேரம்...