×

கந்தர்வகோட்டை அருகே சாலை விபத்தில் பெண் பலி மகன் காயத்துடன் தப்பினார்

கந்தர்வகோட்டை, ஜன.28: கந்தர்வகோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் தாய் பலியானார். மகன் காயத்துடன் தப்பினார். கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி, இவரது மனைவி மலர்கொடி(55). இவர்களது மகன் பாலகிருஷ்ணனும்(27). 3 பேரும் தஞ்சை வரை சென்றுவிட்டு பைக்கில் சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். அப்போது பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த பைக் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கீழே கவிழ்ந்தது. இதில் இருவரும் காயமடைந்தனர்.காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மலர்க்கொடி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : road accident ,Gandharvagoda ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு